சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், ஜெயலலிதா அடக்கம் செய்ய வழங்கப்பட்ட உத்தரவு நகலை பார்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், ஜெயலலிதா அடக்கம் செய்ய வழங்கப்பட்ட உத்தரவு நகலை பார்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் திமுக தரப்பு வாதம் நடத்தியது.
அப்போது, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த, மூத்த திராவிட தலைவருக்கு மெரீனாவில் இடம் கொடுக்கவில்லை என்றால் மக்கள் மனம் புண்படும் என்றும் வாதிட்டது.
இந்த சூழலில், தீர்ப்பை இன்றே வழங்க வேண்டுமா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அவசரமில்லை என்று பதில் கொடுத்தார் அரசுத்துறை வழக்கறிஞர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா அடக்கம் செய்ய வழங்கப்பட்ட உத்தரவு நகலை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திமுக தரப்பு வாதம் தற்போது நிறைவடைந்துள்ளது.
மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் திமுக தரப்பு வாதம் நடத்தியது.
அப்போது, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த, மூத்த திராவிட தலைவருக்கு மெரீனாவில் இடம் கொடுக்கவில்லை என்றால் மக்கள் மனம் புண்படும் என்றும் வாதிட்டது.
இந்த சூழலில், தீர்ப்பை இன்றே வழங்க வேண்டுமா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அவசரமில்லை என்று பதில் கொடுத்தார் அரசுத்துறை வழக்கறிஞர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா அடக்கம் செய்ய வழங்கப்பட்ட உத்தரவு நகலை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திமுக தரப்பு வாதம் தற்போது நிறைவடைந்துள்ளது.