சென்னை: கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கோரிய வழக்கில் தமிழ அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கோரிய வழக்கில் தமிழ அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மெரீனாவில் திமுக கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுப்பெற்று வரும் சூழலில், நேற்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், மெரீனாவில் நினைவிடம் அமைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாலும், கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்ய மெரினாவில் அனுமதியளிக்க முடியாது. மேலும், சர்தார் வல்லபாய் படேல் சாலையின் முகப்பில் உள்ள காந்தி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது. என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நேற்று நள்ளிரவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே அரசு செயல்படுவதாகவும், கிண்டியில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையையே பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது.
மெரீனாவில் திமுக கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுப்பெற்று வரும் சூழலில், நேற்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், மெரீனாவில் நினைவிடம் அமைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாலும், கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்ய மெரினாவில் அனுமதியளிக்க முடியாது. மேலும், சர்தார் வல்லபாய் படேல் சாலையின் முகப்பில் உள்ள காந்தி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது. என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நேற்று நள்ளிரவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே அரசு செயல்படுவதாகவும், கிண்டியில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையையே பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது.