கருணாநிதியின் மறைவையொட்டி மத்திய அரசின் சார்பில் நாளை தேசிய துக்கநாள் அனுசரிப்பு

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் நாளை (ஆக.,08) தேசிய துக்கநாள் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் நாளை (ஆக.,08) தேசிய துக்கநாள் அனுசரிக்கப்படுகிறது. 



11 நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று மாலை 06.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவிற்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

நாளை நடைபெற உள்ள கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரும் நாளை சென்னை வருகின்றனர். 

இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் நாளை தேசிய துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநில தலைநகரங்களில் உள்ள அலுவலகங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதேபோல, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலும் நாளை துக்க நாள் அனுசரிப்பதுடன், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...