கருணாநிதி மறைவின் எதிரொலி : கோவையில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி உயிரிழந்த நிலையில், கோவையில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி உயிரிழந்த நிலையில், கோவையில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

11 நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரின் உயிர் இன்று மாலை 06.10 மணியளவில் பிரிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்ததால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் பதற்றமான சூழலே நிலவி வந்தது. எனவே, மாநிலம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், டவுன்ஹால், சிங்காநல்லூர், சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று இரவு 7 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து புதுபதி நோக்கி 96 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்று கொண்டிருந்தது. குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே சென்ற இந்தப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி எந்து தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் இருந்த பயணிகளுக்க எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் குனியமுத்தூர் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...