கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி உயிரிழந்த நிலையில், கோவையில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி உயிரிழந்த நிலையில், கோவையில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரின் உயிர் இன்று மாலை 06.10 மணியளவில் பிரிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்ததால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் பதற்றமான சூழலே நிலவி வந்தது. எனவே, மாநிலம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், டவுன்ஹால், சிங்காநல்லூர், சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று இரவு 7 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து புதுபதி நோக்கி 96 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்று கொண்டிருந்தது. குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே சென்ற இந்தப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி எந்து தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் இருந்த பயணிகளுக்க எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் குனியமுத்தூர் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
11 நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரின் உயிர் இன்று மாலை 06.10 மணியளவில் பிரிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்ததால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் பதற்றமான சூழலே நிலவி வந்தது. எனவே, மாநிலம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், டவுன்ஹால், சிங்காநல்லூர், சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று இரவு 7 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து புதுபதி நோக்கி 96 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்று கொண்டிருந்தது. குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே சென்ற இந்தப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி எந்து தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் இருந்த பயணிகளுக்க எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் குனியமுத்தூர் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.