கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் 'வா எழுந்து வா தமிழ் ஞானப் பழமே எழுந்து வா' வாசகத்தை மாம்பழத்தில் பொரித்து இளைஞரின் உருக்கச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் 'வா எழுந்து வா தமிழ் ஞானப் பழமே எழுந்து வா' வாசகத்தை மாம்பழத்தில் பொரித்து இளைஞரின் உருக்கச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை தங்கநகை தொழிலாளியான 'உன்னால் முடியும் ராஜா' மைக்ரோ அளவில் தங்கத்தில் கிரிக்கெட் பேட் மற்றும் உலக கோப்பை, தலைவர்களின் சிறிய சிற்பங்களாக செய்வது, சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கருணாநிதியின் வைரவிழா நிகழ்வு கடந்த ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. கருணாநிதியின் தமிழ் தன்னை பிரமிக்க வைப்பதால் அவரது உருவத்தை பென்சிலில் நாற்காலியின் மேல் கருணாநிதி அமர்ந்து கைகாட்டிக் கொண்டிருப்பது போன்றும், அவரது தலைமேல் பேனாமுனை வைத்து, அதில் 94 வயது என்று குறிப்பிட்டு அவரது கலையுணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் சிறிய சிற்பங்களை கடந்த வருடம் உருவாக்கியிருந்தார்.
தற்போது, தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நலக்கோளாறு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற்றுத் திரும்பி வர வேண்டும் என்பதை வலியுறுத்தி 'வா எழுந்து வா' தமிழ் ஞானப் பழமே எழுந்து வா என்ற வாசகத்தை பழுத்த மாம்பழத்தில் ஓவியமாக வரைந்துள்ளார். ஆயில் பெயிண்ட் மட்டும் வாட்டர் கலர் மூலம் மூத்த அரசியல்வாதிக்கு ஒரு சிறிய கலைஞனாக இதனை தான் வரைந்ததாகவும், கலைஞர் கருணாநிதிதான் தன் இரு பெண்களுக்கும் காவிய தமிழ் மற்றும் அபிநய தமிழ் என பெயர் சூட்டியதாகவும் யு.எம்.டி.ராஜா தெரிவித்தார்.
கோவை தங்கநகை தொழிலாளியான 'உன்னால் முடியும் ராஜா' மைக்ரோ அளவில் தங்கத்தில் கிரிக்கெட் பேட் மற்றும் உலக கோப்பை, தலைவர்களின் சிறிய சிற்பங்களாக செய்வது, சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கருணாநிதியின் வைரவிழா நிகழ்வு கடந்த ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. கருணாநிதியின் தமிழ் தன்னை பிரமிக்க வைப்பதால் அவரது உருவத்தை பென்சிலில் நாற்காலியின் மேல் கருணாநிதி அமர்ந்து கைகாட்டிக் கொண்டிருப்பது போன்றும், அவரது தலைமேல் பேனாமுனை வைத்து, அதில் 94 வயது என்று குறிப்பிட்டு அவரது கலையுணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் சிறிய சிற்பங்களை கடந்த வருடம் உருவாக்கியிருந்தார்.
தற்போது, தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நலக்கோளாறு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற்றுத் திரும்பி வர வேண்டும் என்பதை வலியுறுத்தி 'வா எழுந்து வா' தமிழ் ஞானப் பழமே எழுந்து வா என்ற வாசகத்தை பழுத்த மாம்பழத்தில் ஓவியமாக வரைந்துள்ளார். ஆயில் பெயிண்ட் மட்டும் வாட்டர் கலர் மூலம் மூத்த அரசியல்வாதிக்கு ஒரு சிறிய கலைஞனாக இதனை தான் வரைந்ததாகவும், கலைஞர் கருணாநிதிதான் தன் இரு பெண்களுக்கும் காவிய தமிழ் மற்றும் அபிநய தமிழ் என பெயர் சூட்டியதாகவும் யு.எம்.டி.ராஜா தெரிவித்தார்.