கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள எம்.எஸ்.எம்.இ., சட்டத்திருத்த மசோதா சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள எம்.எஸ்.எம்.இ., சட்டத்திருத்த மசோதா சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மத்திய அரசு கடந்த மாதம் 23-ம் தேதி எம்.எஸ்.எம்.இ., சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஏற்கனவே ஜி.எஸ்.டி., வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வரும் நிலையில் மத்திய அரசு முன் வைத்துள்ள இந்த சட்டத்திருத்தமானது சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்குமென்று
சிறு குறு தொழிலாளர் தரப்பில் எதிர்ப்புகள் வந்துள்ளது.
இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக கோவையில் உள்ள சிறு குறு தொழில் அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மசோதாவானது, சிறு தொழிலாக பதிவு பெறுவதற்கான உச்சவரம்பை 225 கோடி ரூபாய் வரை இடமளிக்கிறது, இந்த ஷரத்தை நீக்க வேண்டும் எனவும் உச்சவரம்பை அதிகரிக்கும் பட்சத்தில் அது கார்பரேட் நிறுவனங்களுடன் சிறு குறு நிறுவனங்கள் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது ஒருவருக்கும் 75 கோடி ரூபாய் உச்சவரம்பே போதுமானது. எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
சிறு மற்றும் குறு நிறுவனம் என்று வகைப்படுத்துவதை விற்று முதல் ( turnover) மாறுகின்ற அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வணிகர்கள் தங்களை சிறு, குறு நிறுவனமாக பதிவு செய்துகொள்ள தடை செய்வதற்கு ஏதுவான தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும். கோரிக்கைகளை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். என்றனர்.
மத்திய அரசு கடந்த மாதம் 23-ம் தேதி எம்.எஸ்.எம்.இ., சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஏற்கனவே ஜி.எஸ்.டி., வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வரும் நிலையில் மத்திய அரசு முன் வைத்துள்ள இந்த சட்டத்திருத்தமானது சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்குமென்று
சிறு குறு தொழிலாளர் தரப்பில் எதிர்ப்புகள் வந்துள்ளது.
இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக கோவையில் உள்ள சிறு குறு தொழில் அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மசோதாவானது, சிறு தொழிலாக பதிவு பெறுவதற்கான உச்சவரம்பை 225 கோடி ரூபாய் வரை இடமளிக்கிறது, இந்த ஷரத்தை நீக்க வேண்டும் எனவும் உச்சவரம்பை அதிகரிக்கும் பட்சத்தில் அது கார்பரேட் நிறுவனங்களுடன் சிறு குறு நிறுவனங்கள் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது ஒருவருக்கும் 75 கோடி ரூபாய் உச்சவரம்பே போதுமானது. எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
சிறு மற்றும் குறு நிறுவனம் என்று வகைப்படுத்துவதை விற்று முதல் ( turnover) மாறுகின்ற அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வணிகர்கள் தங்களை சிறு, குறு நிறுவனமாக பதிவு செய்துகொள்ள தடை செய்வதற்கு ஏதுவான தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும். கோரிக்கைகளை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். என்றனர்.