விபத்துகள் நடப்பதைத் தடுக்க கோரி சுந்தராபுரம் பொதுமக்கள் சாலை மறியல்

கோவை: சுந்தராபுரம் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதைத் தடுக்க கோரி, நேற்று அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.


கோவை: சுந்தராபுரம் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதைத் தடுக்க கோரி, நேற்று அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 1-ம் தேதி அதிவேகமாக வந்த சொகுசு நிலை தடுமாறி சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியது.



இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் மூன்று பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஒட்டுநர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த சுபாஷினி, நாராயணன், ரங்கதாஸ், அம்சவேணி, குப்பாத்தாள், ரூக்குமணி ஆகிய 6 பேருக்கும் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த சூழலில், அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும், அதனைத் தடுக்கவும், வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி பொதுமக்கள் தீடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...