குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருவதைத் தடுக்க தொரப்பள்ளி அகழி சீரமைப்பு

நீலகிரி: முதுமலையிலிருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்கும் வகையில், தொரப்பள்ளி அருகே வனத்தை ஒட்டி அமைக்கப்பட்ட அகழியை வனத்துறை ஊழியர்கள் சீரமைத்தனர்.

நீலகிரி: முதுமலையிலிருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்கும் வகையில், தொரப்பள்ளி அருகே வனத்தை ஒட்டி அமைக்கப்பட்ட அகழியை வனத்துறை ஊழியர்கள் சீரமைத்தனர்.

முதுமலை புலிகள் காப்பகம் வன எல்லையை ஒட்டி, கூடலுார் தொரப்பள்ளி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க வனத்தை ஒட்டி அகழி அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் காட்டு யானைகள் அகழி வழியாக இரவில் ஊருக்குள் வந்து, விவசாயப் பயிர்கள் மற்றும் வீடுகளைச் சேதப்படுத்தி வருகின்றன.



கடந்த மாதம் ஊருக்குள் புகுந்து காட்டு யானை விரட்டியதில் இரு மாணவியர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதைத் தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க 37 வன ஊழியர்கள், இரண்டு துப்பாக்கிகளுடன் ஏழு குழுக்களாக பிரிந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அகழியை பொக்லைன் மூலம் சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 



இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், "அகழியை சீரமைப்பதன் மூலம் தொரப்பள்ளிக்குள் யானைகள் வருவது தடுக்கப்படும். எனினும், முன்னெச்சரிக்கையாக அகழியை ஒட்டி விரைவில் மின்வேலி அமைக்கப்படும்" என்றனர்

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...