கோவை: கணுவாயில் உள்ள மளிகைக் கடையில் ஒன்றில் முகமூடி அணிந்து வந்து திருடிய கொள்ளையனை, சி.சி.டி.வி., காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கணுவாயில் உள்ள மளிகைக் கடையில் ஒன்றில் முகமூடி அணிந்து வந்து திருடிய கொள்ளையனை, சி.சி.டி.வி., காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
கணுவாய் வி.எம்.டி., நகரில் திருநேல்வேலியைச் சேர்ந்த தங்கராஜா என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடை உள்ளது. ஓராண்டாக இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தக் கடையில், நேற்றிரவு இரண்டு மணிக்கு மேற்கூரையை உடைத்து இறங்கிய திருடன் கள்ளாபெட்டியில் இருந்த ரூ.25,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளான்.

மேற்கூரையில் இருந்து இரும்பு செயினின் உதவியால் உள்ளே புகுந்த திருடன், முகத்தை மூடிக்கொண்டு தலைக்கு தொப்பி அணிந்து அடையாளம் தெரியாத வண்ணம் சென்று கொள்ளையடித்தது, அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம் போல கடை திறக்க வந்த உரிமையாளர் தங்கராஜா, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு ரொக்கம் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது தொடர்பாக வடவள்ளி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.