வீட்டிலேயே மருத்துவர் இல்லாமல் சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடாது : கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள்

கோவை : வீட்டில் இருந்தவாறே மருத்துவர் இல்லாமல் சிகிச்சை முறைகளை செய்யக் கூடாது என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை : வீட்டில் இருந்தவாறே மருத்துவர் இல்லாமல் சிகிச்சை முறைகளை செய்யக் கூடாது என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பதற்கு, இலவச பயிற்சி வழங்கப்படுவதாக விளம்பரம் அளித்த நிஷ்டை மையத்தின் தலைவர் ஹுலர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இதுபோன்ற மருத்துவர் இல்லாத சிகிச்சைகளை பொதுமக்கள் ஒருபோதும் செய்யக் கூடாது என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் பேஸ்புக் மூலமாக, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்ந்து அவர் பேசியதாவது :- வீட்டிலேயே சிகிச்சை பெறுவது, சமூக வலைதளம் மூலம் காட்சிகளைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்று தவறான வழிகளில் வழிநடத்துவோர்கள் மீதும் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். மேலும், தற்போது நவீன மருத்துவ வசதிகள் இருந்தும் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. எனவே பொதுமக்கள், மாணவர்களின் பங்கு இதுபோன்ற சமயங்களில் நிச்சயம் வேண்டும், இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...