கிராமப்புற பகுதிகளில் கூட்டம், கூட்டமாக வரும் காட்டு மாடுகள்: விவசாயிகள், வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டம், கூட்டமாகக் காட்டு மாடுகள் உலா வரும் தேயிலை தோட்ட விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டம், கூட்டமாகக் காட்டு மாடுகள் உலா வரும் தேயிலை தோட்ட விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் காட்டு மாடு, யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை விரட்டப் போகும் மனிதர்களை அவை தாக்குவது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக தேயிலை தோட்டங்கள், விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. அவ்வாறு வரும் காட்டு மாடுகள் மனிதர்களையும் தாக்கி வருகிறது. 



இதில், உச்சகட்டமாக மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், உதகையை அடுத்த அகலார் கிராம சுற்றுப்புறங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் உலா வந்தன. இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து தேயிலை பறிக்கச் செல்லவில்லை. மேலும், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கினர். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...