திருப்பூர்: பல்லடம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே இடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). அருள்புரம் பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 31-ம் தேதி மாலை ஆறு மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் அருள்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருவர் அவரை காரில் கடத்தியதோடு, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
இதையடுத்து மணிகண்டன் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் சூழந்து காரை சிறைபிடித்தனர். இதனால் பயந்து போன கொள்ளையர்கள் இருவரும் தப்பியோடினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை பூமலூர் பிரிவு அருகே போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுல்தான்பேட்டையை சேர்ந்த அறிவழகன் மகன் பிரவீன்குமார்(20), இடுவாய் பகுதியை சுந்தர் மகன் அருண்குமார்(25), கருப்பையா மகன் வினோத்குமார்(24), திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் மகன் நித்தியானந்தம்(29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நரி என்கிற மணிகண்டன்(28) ஆகியோர் இணைந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காரில் மணிகண்டனை கடத்தி பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்களை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே இடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). அருள்புரம் பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 31-ம் தேதி மாலை ஆறு மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் அருள்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருவர் அவரை காரில் கடத்தியதோடு, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
இதையடுத்து மணிகண்டன் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் சூழந்து காரை சிறைபிடித்தனர். இதனால் பயந்து போன கொள்ளையர்கள் இருவரும் தப்பியோடினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை பூமலூர் பிரிவு அருகே போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுல்தான்பேட்டையை சேர்ந்த அறிவழகன் மகன் பிரவீன்குமார்(20), இடுவாய் பகுதியை சுந்தர் மகன் அருண்குமார்(25), கருப்பையா மகன் வினோத்குமார்(24), திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் மகன் நித்தியானந்தம்(29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நரி என்கிற மணிகண்டன்(28) ஆகியோர் இணைந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காரில் மணிகண்டனை கடத்தி பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்களை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.