கோவை: கோவையில் பயணி ஒருவர் தவறவிட்ட பர்சை மீட்டு உரியவரிடம் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை: கோவையில் பயணி ஒருவர் தவறவிட்ட பர்சை மீட்டு உரியவரிடம் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை மாநகர காவல்துறையில் போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிபவர் மகேஷ் என்ற ராக்கி மகேஷ்.
வழக்கம் போல இவர் குப்புசாமி நாயுடு மருத்துவமனை சிக்னல் அருகே போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு ஒது பர்ஸ் கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனுள் சில ஏ.டி.எம் கார்டுகள், பான் கார்டு மற்றும் அசல் ஓட்டுனர் உரிமம் போன்றவை இருந்தன.
அதனை எடுத்த ராக்கி மகேஷ் ஓட்டுனர் உரிமத்தில் இருந்த முகவரியை பார்த்தபோது அது சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், அந்த நபரின் வீட்டிற்குச் சென்ற ராக்கி மகேஷ்-ன் நண்பர், பர்ஸ் போலீசாரிடம் இருப்பதை தெரிவித்தார்.
பின்னர், அந்த பர்சுக்கு உரியவர் அவினாசி சாலையில் பணியில் இருந்த ராக்கி மகேசிடம் சென்று அவருடைய பர்சை திரும்பப்பெற்றார்.
சாலையில் கேட்பாரற்று கிடந்த பர்சை உரியவரிடம் மீட்டுக் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது