30-ஆம் தேதிக்கு முன்னதாகவே ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது - திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஊதியம் இதுவரை ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஊதியம் இதுவரை ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், மாணவ மாணவியருக்கான உன்னால் முடியும் பயிற்சி பட்டறை துவக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினர்.

இதையடுத்து, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினர். 

அதற்கு, "அது போன்ற நிலை எங்கும் இல்லை. தேவைக்கேற்ப அங்கங்கே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம் என்பது ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை. இந்த அரசு மாதம்தோறும் 30-ஆம் தேதிக்கு முன்னதாகவே அவர்களுக்கு வேண்டிய நிதியை வழங்கி வருகிறது." என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...