திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஊதியம் இதுவரை ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஊதியம் இதுவரை ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், மாணவ மாணவியருக்கான உன்னால் முடியும் பயிற்சி பட்டறை துவக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினர்.
இதையடுத்து, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினர்.
அதற்கு, "அது போன்ற நிலை எங்கும் இல்லை. தேவைக்கேற்ப அங்கங்கே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம் என்பது ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை. இந்த அரசு மாதம்தோறும் 30-ஆம் தேதிக்கு முன்னதாகவே அவர்களுக்கு வேண்டிய நிதியை வழங்கி வருகிறது." என்றார்.