உடுமலையில் 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருப்பூர்: உடுமலை அருகே கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது

திருப்பூர்: உடுமலை அருகே கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி முதலைப் பண்ணை முதல் கல்லாபுரம் வரை செல்லும் சாலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது.

பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த சாலை பழுதடைந்தது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கியது. ஆனால், சாலை அமைக்க அமராவதி வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



அந்த சாலை புலிகள் காப்பகத்திற்குள் வருவதால், சாலை மேம்பாட்டு பணிகள் செய்ய மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வாகனங்கள் இயக்க அனுமதிக்க முடியாது எனவும் சாலை அமைக்க விடாமல் நிறுத்தினர்.

பின்னர் பொதுமக்கள் வனத்துறையை எதிர்த்து ஆா்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வந்த சாலை என்பதால் சாலையை புதுப்பிக்க அனுமதி அளித்தனர். 



இதைத் தொடர்ந்து, நேற்று காலை முதல் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...