கோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாய்பாபாகோவில் கே.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமலா என்கிற ரம்யா (வயது 43). இவரது மகன் அபுலாஷ் என்கிற அபிலேஷ் (21). இவர்கள் இருவரும் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்து குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது கடந்த மாதம் 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரம்யா மற்றும் அபிலேஷ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.