சென்னை: தமிழக மக்களைப் போலவே திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருக்கிறார் என்று அவரை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக மக்களைப் போலவே திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருக்கிறார் என்று அவரை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான மு.கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சூழலில், அவரைக் காண தி.மு.க., தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மருத்துவமனைக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அவரைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "தி.மு.க., தலைவர் கருணாநிதி தமிழ் மக்களின் உணர்வாக விளங்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், அவருக்கும் இடையிலான நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. அவரைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக உள்ளார். தமிழக மக்கள் போல் அவர் மிகவும் பலமான மனம் கொண்டவர். அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி குறித்து சோனியாவும் விசாரித்ததை அவரிடம் தெரிவித்தேன்." என்றார்.


உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான மு.கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சூழலில், அவரைக் காண தி.மு.க., தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மருத்துவமனைக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அவரைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "தி.மு.க., தலைவர் கருணாநிதி தமிழ் மக்களின் உணர்வாக விளங்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், அவருக்கும் இடையிலான நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. அவரைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக உள்ளார். தமிழக மக்கள் போல் அவர் மிகவும் பலமான மனம் கொண்டவர். அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி குறித்து சோனியாவும் விசாரித்ததை அவரிடம் தெரிவித்தேன்." என்றார்.
