கோவை: தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சி.ஐ.டி.யு., கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் 4-வது மாநாடு கோவை திவ்யோதயா அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட தலைவர் பி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு கொடியை மாவட்ட துணை செயலாளர் அப்துல்கலாம் ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து, அறிக்கையின் மீது மாநாட்டு பிரதிநிதிகள் விவாதம் நடத்தி இறுதிப்படுத்தினர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல், சுங்கச்சாவடியை தடை செய்தல், மாநில வரி, மாநில நுழைவு வரி என மோட்டார் தொழிலை சீரழிக்கும் வரிவிதிப்புகளை ரத்து செய்தல், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக சாலை போக்குவரத்தை சீர்குலைக்கும் மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிடுதல் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டது.
சி.ஐ.டி.யு., கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் 4-வது மாநாடு கோவை திவ்யோதயா அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட தலைவர் பி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு கொடியை மாவட்ட துணை செயலாளர் அப்துல்கலாம் ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து, அறிக்கையின் மீது மாநாட்டு பிரதிநிதிகள் விவாதம் நடத்தி இறுதிப்படுத்தினர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல், சுங்கச்சாவடியை தடை செய்தல், மாநில வரி, மாநில நுழைவு வரி என மோட்டார் தொழிலை சீரழிக்கும் வரிவிதிப்புகளை ரத்து செய்தல், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக சாலை போக்குவரத்தை சீர்குலைக்கும் மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிடுதல் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டது.