கோவை: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிக அளவில் கொட்டித் தீர்த்தது.

மாநகர பகுதிகளில் தற்போது மழை அளவு குறைந்து விட்டாலும், வால்பாறை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஊரகப் பகுதிகளில் தற்போதுவரை மழை பெய்து வருகிறது. வால்பாறை தாலுக்கா அலுவலகம் பகுதியில் மட்டும் நேற்று 6 மி.மீ வரை மழை பதிவாகியிருந்தது.

பொள்ளாச்சியில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தற்போது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான, காளியாபுரம், சேத்துமடை, ஆழியாறு மற்றும் வேட்டைக்காரன் புதூர் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. மேலும், உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீர் கரையை தாண்டி செல்கிறது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிக அளவில் கொட்டித் தீர்த்தது.

மாநகர பகுதிகளில் தற்போது மழை அளவு குறைந்து விட்டாலும், வால்பாறை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஊரகப் பகுதிகளில் தற்போதுவரை மழை பெய்து வருகிறது. வால்பாறை தாலுக்கா அலுவலகம் பகுதியில் மட்டும் நேற்று 6 மி.மீ வரை மழை பதிவாகியிருந்தது.

பொள்ளாச்சியில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தற்போது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான, காளியாபுரம், சேத்துமடை, ஆழியாறு மற்றும் வேட்டைக்காரன் புதூர் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. மேலும், உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீர் கரையை தாண்டி செல்கிறது.