ஆம்புலன்சில் இருந்து பூமிக்கு வந்த குட்டி தேவதை : திருப்பூரில் ருசிகரம்

திருப்பூர்: திருப்பூரில் ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பூமிக்குத் தந்த மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர்: திருப்பூரில் ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பூமிக்குத் தந்த மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுசில். இவருடைய மனைவி கோகிலா (20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோகிலா-வின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அருணா உடனிருந்தார். ஆம்புலன்ஸ் கருப்பன கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது கோகிலா-வுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.

பெண் குழந்தை

இதனைத் தொடர்ந்து, மருத்துவ உதவியாளர் அருணா, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கோகிலா-வுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். கடும் போராட்டத்திற்கு பிறகு, சுகப்பிரசவம் மூலம் கோகிலா-வுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து, தாயையும், சேயையும் அதே ஆம்புலன்சில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பார்த்த மருத்துவ உதவியாளரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...