கோவை: மேட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலைமை பெண் காவலர் படுகாயம் அடைந்தார்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலைமை பெண் காவலர் படுகாயம் அடைந்தார்.
அன்னூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராகப் பாக்கியம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றப் பணியினை மேற்கொள்ள இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். வழக்கு சம்பந்தமான நீதிமன்றப் பணியினை முடித்து விட்டு, மாலை சிறுமுகை சாலை வழியாக அன்னூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சிறுமுகை சாலையில் உள்ள அறிவொளி நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயமடைந்தார். தலை மற்றும் கால், கை என உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராகப் பாக்கியம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றப் பணியினை மேற்கொள்ள இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். வழக்கு சம்பந்தமான நீதிமன்றப் பணியினை முடித்து விட்டு, மாலை சிறுமுகை சாலை வழியாக அன்னூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சிறுமுகை சாலையில் உள்ள அறிவொளி நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயமடைந்தார். தலை மற்றும் கால், கை என உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.