கோவை: நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கோவை: நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
நலவாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும், ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பு வழங்கிட வேண்டும், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு நிபந்தனை இன்றி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.

பின்னர் மாவட்ட தலைவர் செல்வராஜ் கூறுகையில். " சுமார் 35.000-க்கும் மேற்பட்டோர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் என்பது கேள்வி குறியாக உள்ளது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காமலும், நலவாரியத்தில் இணையாமல் உள்ளவர்களை நேரிடையாக சந்திக்க உள்ளோம்," என்றார்.
நலவாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும், ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பு வழங்கிட வேண்டும், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு நிபந்தனை இன்றி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.

பின்னர் மாவட்ட தலைவர் செல்வராஜ் கூறுகையில். " சுமார் 35.000-க்கும் மேற்பட்டோர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் என்பது கேள்வி குறியாக உள்ளது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காமலும், நலவாரியத்தில் இணையாமல் உள்ளவர்களை நேரிடையாக சந்திக்க உள்ளோம்," என்றார்.