காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருகை

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர்.


சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர். 



தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சை பிரிவில், 8 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், காவரி மருத்துவமனையும் அவரது உடல்நலம் குறித்து தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், நேற்றிரவு வெளியிடப்பட்ட 4-வது அறிக்கையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது, சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சேலத்தில் இன்று பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று நள்ளிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னை திரும்பினார். 



இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக ஏற்கனவே அங்கு தொண்டர்கள் குவிந்து உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...