தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது: திருப்பூரில் ஜி.கே.வாசன் பேச்சு

திருப்பூர்: தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்பது உண்மை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்பது உண்மை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.



முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீப காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக செயின் பறிப்பு, கொலை, பாலியல் வன் கொடுமை ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அரசு அவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனை தவறு என்று சொல்லிவிட முடியாது. அதே சூழ்நிலையில், தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவிவருகிறது என்பது உண்மை.

இந்தியாவின் முதுபெரும் தலைவரும், தி.மு.க.,வின் தலைவருமான கருணாநிதி உடல்நிலை தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பூரண நலமடைந்து திரும்பி வர வேண்டும் என்று த.மா.கா., விரும்புகிறது. உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை மாநில அரசு கட்டாயம் குறைத்திட வேண்டும். ஜி.எஸ்.டி., நூல் விலை உயர்வு ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்தாததால் பின்னலாடை துறை சரிவடைந்து வருகிறது." என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...