திருப்பூர்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக வெளியாகும் தகவல் மனநிறைவை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக வெளியாகும் தகவல் மனநிறைவை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் உடுமலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி,உடுமலைப் பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகள் பணியாற்றுமாறு அவர் உத்தரவிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது :- தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக வரும் தகவல் மனநிறைவைத் தருகிறது. மேலும், பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை என்பது ஆபரேசன் சக்சஸ் நோயாளி இறந்து விட்டார் என்பது போல் உள்ளது. நகராட்சி பகுதிகளில் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் உடுமலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி,உடுமலைப் பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகள் பணியாற்றுமாறு அவர் உத்தரவிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது :- தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக வரும் தகவல் மனநிறைவைத் தருகிறது. மேலும், பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை என்பது ஆபரேசன் சக்சஸ் நோயாளி இறந்து விட்டார் என்பது போல் உள்ளது. நகராட்சி பகுதிகளில் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.