கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவரது கோபாலபுரம் வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திமுக தலைவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் ஊசி மூலம் நரம்பின் வழியாக செலுத்தப்பட்டு வருகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவக்குழு கவனித்துக் கொள்கிறது. மருத்துவ வசதிகள் அனைத்தும் வீட்டிலேயே செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் நேரில் பார்க்க வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...