சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவரது கோபாலபுரம் வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் ஊசி மூலம் நரம்பின் வழியாக செலுத்தப்பட்டு வருகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவக்குழு கவனித்துக் கொள்கிறது. மருத்துவ வசதிகள் அனைத்தும் வீட்டிலேயே செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் நேரில் பார்க்க வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவரது கோபாலபுரம் வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் ஊசி மூலம் நரம்பின் வழியாக செலுத்தப்பட்டு வருகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவக்குழு கவனித்துக் கொள்கிறது. மருத்துவ வசதிகள் அனைத்தும் வீட்டிலேயே செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் நேரில் பார்க்க வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
