முத்தையா முரளிதரன் சுழற்பந்தை சந்திப்பது கடினமானதாக இருந்தது : முன்னாள் ஆஸி., வீரர் மைக் ஹசி கோவையில் பேச்சு

கோவை: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் கோவை வந்திருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக் ஹசி நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு வருகை புரிந்தார்.


கோவை: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் கோவை வந்திருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக் ஹசி நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு வருகை புரிந்தார்.

அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அப்பள்ளி மாணவர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை மைக் ஹசி பார்வையிட்டு ரசித்தார்.



பின்னர் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சுழற்பந்தை சந்திப்பது தான் மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், அவர் பந்தை வீசும் போது கண்களை உருட்டி பந்து வீசுவார் என்றும் தெரிவித்தார். பந்து அவரது விரல்களில் மாயாஜாலம் காட்டும் என்றார்.



"உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் வேடிக்கையான தருணம் எது?" என்ற மாணவர்களின் கேள்விக்கு, "எம்.சி.ஜி. மைதானத்தில் தென் ஆப்பிரிகவிற்கு எதிரான போட்டியில் டெயில் ஸ்டெயின் பந்தை உயரத் தூக்கி அடிக்க பவுண்டரி லைன் அருகில் நின்றிருந்த நான் அதைப் பிடிக்க முயன்றேன். ஆனால், வெயிலின் காரணமாக பந்தை பிடிக்க முடியவில்லை. மேலும், பந்து எனது கால் அருகே விழுந்தது.

ஓய்வறையில் இந்த பதிவை பார்த்து சக வீரர்கள் கிண்டலடித்தது வேடிக்கையான தருணமாக இருந்தது." என்றார்.



உங்களின் முன்னேற்றதிற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு, என்னை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்திய தனது தாய், தந்தை தனது பயிற்சியாளர், நண்பர்கள் என பலர் இருப்பினும் நீண்ட காலமாக தன்னுடன் விளையாடிய வீரர்கள் தான் தனது முனேற்றதிற்கு முக்கிய காரணம் என்றார்.

பின்னர் மாணவர்களுக்கு தனது கையொப்பமிட்ட தொப்பிகளை வழங்கினார். பின்னர் அங்கிருந்து கலை அறிவியல் கல்லூரிக்கு சென்று மாணவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் எஸ்.என்.ஆர் கிரிக்கெட் மைதானத்தில் 16 வயதிற்கு உட்பட்ட வீரர்களுடன் கிரிக்கெட் தொடர்பான நுட்பங்கள் குறித்து விளக்கினார்.



இதன் பின்னர் ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்ற அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேசினார். நாளை காலை புறவழி சாலையில் அமைந்துள்ள சக்தி தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களைச் சந்திக்க உள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...