உதகையில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம்

நீலகிரி : உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் உள்ளூர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி : உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் உள்ளூர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

மலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப்புற பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகள் அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருகிறது. இதனால், சில மனித உயிர்களும் பலியாகி வருவது வாடிக்கையாகவே உள்ளது.

இந்நிலையில், கூடலூர், தேவலா பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் தற்போது உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் தங்கி தனியார் தேயிலை எஸ்டேட்டில் இலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல, அவர் இன்று தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது, சிறுத்தை ஒன்று அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...