உதகையில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம்

நீலகிரி : உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் உள்ளூர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி : உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் உள்ளூர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

மலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப்புற பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகள் அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருகிறது. இதனால், சில மனித உயிர்களும் பலியாகி வருவது வாடிக்கையாகவே உள்ளது.

இந்நிலையில், கூடலூர், தேவலா பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் தற்போது உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் தங்கி தனியார் தேயிலை எஸ்டேட்டில் இலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல, அவர் இன்று தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது, சிறுத்தை ஒன்று அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...