கோவை: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆறாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தால், மார்க்கெட், தொழிற்சாலைகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழலில், கோவையில் ரேஷன் பொருட்களை கடைகளுக்கு கொண்டு சேர்க்க முடியாத காரணத்தால் மக்களுக்கு அரசி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 1,400 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால், அங்கு பொருட்கள் எடுத்துச் செல்ல முடியவில்லை.
இதனால், ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெரியாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், "மாதந்தோறும் ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வாங்குவேன். ஆனால், தற்போது இரண்டு மூட்டை மட்டுமே இருப்பு உள்ளதாகக் கூறி 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கியுள்ளனர். இந்த பிரச்சனையை அரசு விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்." என்றார்.
"எனக்கு 20 கிலோ அரிசி கிடைத்துவிட்டது. ஆனால், சர்க்கரை இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். எங்களைப் போன்ற ஏழை மக்கள் தனியாரிடம் இருந்து சர்க்கரை வாங்கி வாழ்க்கை நடத்துவது இயலாத காரியம்." என்கிறார் சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர்.
இது குறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சேமிப்பு கிடங்கில் அடுத்த 15 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் இருப்பு உள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அவற்றை நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது சிறிய ரக சரக்கு வாகனங்கள் மூலமாக அவற்றை அனுப்பு வருகிறோம். விரைவில் இந்த தட்டுப்பாடு நீங்கும்." என்றார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆறாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தால், மார்க்கெட், தொழிற்சாலைகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழலில், கோவையில் ரேஷன் பொருட்களை கடைகளுக்கு கொண்டு சேர்க்க முடியாத காரணத்தால் மக்களுக்கு அரசி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 1,400 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால், அங்கு பொருட்கள் எடுத்துச் செல்ல முடியவில்லை.
இதனால், ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெரியாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், "மாதந்தோறும் ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வாங்குவேன். ஆனால், தற்போது இரண்டு மூட்டை மட்டுமே இருப்பு உள்ளதாகக் கூறி 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கியுள்ளனர். இந்த பிரச்சனையை அரசு விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்." என்றார்.
"எனக்கு 20 கிலோ அரிசி கிடைத்துவிட்டது. ஆனால், சர்க்கரை இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். எங்களைப் போன்ற ஏழை மக்கள் தனியாரிடம் இருந்து சர்க்கரை வாங்கி வாழ்க்கை நடத்துவது இயலாத காரியம்." என்கிறார் சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர்.
இது குறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சேமிப்பு கிடங்கில் அடுத்த 15 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் இருப்பு உள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அவற்றை நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது சிறிய ரக சரக்கு வாகனங்கள் மூலமாக அவற்றை அனுப்பு வருகிறோம். விரைவில் இந்த தட்டுப்பாடு நீங்கும்." என்றார்.