லாரி ஸ்ட்ரைக் எதிரொலி: கோவையில் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

கோவை: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து ஆறாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தால், மார்க்கெட், தொழிற்சாலைகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், கோவையில் ரேஷன் பொருட்களை கடைகளுக்கு கொண்டு சேர்க்க முடியாத காரணத்தால் மக்களுக்கு அரசி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 1,400 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால், அங்கு பொருட்கள் எடுத்துச் செல்ல முடியவில்லை.

இதனால், ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெரியாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், "மாதந்தோறும் ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வாங்குவேன். ஆனால், தற்போது இரண்டு மூட்டை மட்டுமே இருப்பு உள்ளதாகக் கூறி 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கியுள்ளனர். இந்த பிரச்சனையை அரசு விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்." என்றார். 

"எனக்கு 20 கிலோ அரிசி கிடைத்துவிட்டது. ஆனால், சர்க்கரை இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். எங்களைப் போன்ற ஏழை மக்கள் தனியாரிடம் இருந்து சர்க்கரை வாங்கி வாழ்க்கை நடத்துவது இயலாத காரியம்." என்கிறார் சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர்.

இது குறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சேமிப்பு கிடங்கில் அடுத்த 15 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் இருப்பு உள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அவற்றை நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது சிறிய ரக சரக்கு வாகனங்கள் மூலமாக அவற்றை அனுப்பு வருகிறோம். விரைவில் இந்த தட்டுப்பாடு நீங்கும்." என்றார். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...