கோவை வழியாக கேரளாவுக்கு குட்கா பொருட்கள் கடத்த முயன்ற இருவர் கைது

கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை கந்தன்சாவடி போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை கந்தன்சாவடி போலீசார் கைது செய்தனர்.



கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர்கள் விபின் (30) மற்றும் ரியாஸ் (33). இவர்கள் பெங்களூரில் இருந்து பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை வாங்கி அவற்றை கோவை வழியாக கேரளா கொண்டு செல்ல முயன்றனர்.

அவர்களது கார் வாளையார் அருகே சென்ற போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடை செய்யப்பட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ற காரில் இருந்த 150 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக, வழக்குத் தொடுக்க இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் பான் மசாலா பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...