கோவை: கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்துள்ளதாகக் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை: கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்துள்ளதாகக் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 1860 ஆண்டு ஜூலை 24-ம் தேதி ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியாவில் வருமான வரி செலுத்தும் முறை சர் ஜோம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும், வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் வருமான வரி தினம் என இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 158 வது வருமான வரி தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், வருமான வரித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார் பேசுகையில், "சுதந்திரத்தின் போது 50 கோடியாக இருந்த வருமான வரி தற்போது லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மேலும், கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்துள்ளது. இருப்பினும், முழு கணிணிமயமாக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தும் முறை குறித்து போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை," என்றார்.
கடந்த 1860 ஆண்டு ஜூலை 24-ம் தேதி ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியாவில் வருமான வரி செலுத்தும் முறை சர் ஜோம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும், வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் வருமான வரி தினம் என இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 158 வது வருமான வரி தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், வருமான வரித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார் பேசுகையில், "சுதந்திரத்தின் போது 50 கோடியாக இருந்த வருமான வரி தற்போது லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மேலும், கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்துள்ளது. இருப்பினும், முழு கணிணிமயமாக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தும் முறை குறித்து போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை," என்றார்.