சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு, ஆசிய பசிபிக் பந்தய சாம்பியன்ஷிப் பணிக் குழுமத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்ததாக விக்கி சந்தோக் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு, ஆசிய பசிபிக் பந்தய சாம்பியன்ஷிப் பணிக் குழுமத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்ததாக விக்கி சந்தோக் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள ஜோகோர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, எஃப்.ஐ.ஏ., ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப் வொர்க்கிங் குழுமத்தின் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில், உறுப்பினர் வெயின் கிறிஸ்டியும் பங்கேற்று, சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் திட்டங்கள் மற்றும் சவால்களை எடுத்துரைத்தார்.
பின்னர், இந்தப் பதவிக்கான போட்டியில் இடம்பெறாமல் இருந்தாலும், சக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் வற்புறுத்தலால் விக்கி சந்தோக் ஒருமனதாக நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக ஜப்பானைச் சேர்ந்த டக்காஹிட்டோ சுகிதாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விக்கி சந்தோக் பேசுகையில், "சக உறுப்பினர்கள் தன்னை ஒருமனதாக மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பந்தயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆற்றிய பணிளாலே, தற்போது நான் கவுரவிக்கப்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் புதிய பிராந்தியங்களில் போட்டிகளை விரிவுபடுத்துவதே தங்களது முக்கிய நோக்கமாகும்," என்றார்.
மலேசியாவில் உள்ள ஜோகோர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, எஃப்.ஐ.ஏ., ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப் வொர்க்கிங் குழுமத்தின் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில், உறுப்பினர் வெயின் கிறிஸ்டியும் பங்கேற்று, சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் திட்டங்கள் மற்றும் சவால்களை எடுத்துரைத்தார்.
பின்னர், இந்தப் பதவிக்கான போட்டியில் இடம்பெறாமல் இருந்தாலும், சக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் வற்புறுத்தலால் விக்கி சந்தோக் ஒருமனதாக நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக ஜப்பானைச் சேர்ந்த டக்காஹிட்டோ சுகிதாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விக்கி சந்தோக் பேசுகையில், "சக உறுப்பினர்கள் தன்னை ஒருமனதாக மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பந்தயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆற்றிய பணிளாலே, தற்போது நான் கவுரவிக்கப்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் புதிய பிராந்தியங்களில் போட்டிகளை விரிவுபடுத்துவதே தங்களது முக்கிய நோக்கமாகும்," என்றார்.