எஃப்.ஐ.ஏ., ஏ.பி.ஆர்.சி., குழுமத்தின் தலைவராக விக்கி சந்தோக் மீண்டும் தேர்வு

சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு, ஆசிய பசிபிக் பந்தய சாம்பியன்ஷிப் பணிக் குழுமத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்ததாக விக்கி சந்தோக் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு, ஆசிய பசிபிக் பந்தய சாம்பியன்ஷிப் பணிக் குழுமத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்ததாக விக்கி சந்தோக் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மலேசியாவில் உள்ள ஜோகோர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, எஃப்.ஐ.ஏ., ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப் வொர்க்கிங் குழுமத்தின் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில், உறுப்பினர் வெயின் கிறிஸ்டியும் பங்கேற்று, சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் திட்டங்கள் மற்றும் சவால்களை எடுத்துரைத்தார். 

பின்னர், இந்தப் பதவிக்கான போட்டியில் இடம்பெறாமல் இருந்தாலும், சக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் வற்புறுத்தலால் விக்கி சந்தோக் ஒருமனதாக நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக ஜப்பானைச் சேர்ந்த டக்காஹிட்டோ சுகிதாவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து விக்கி சந்தோக் பேசுகையில், "சக உறுப்பினர்கள் தன்னை ஒருமனதாக மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பந்தயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆற்றிய பணிளாலே, தற்போது நான் கவுரவிக்கப்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் புதிய பிராந்தியங்களில் போட்டிகளை விரிவுபடுத்துவதே தங்களது முக்கிய நோக்கமாகும்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...