கோவை: தமிழகம் முழுவதும் சொத்துவரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோவை: தமிழகம் முழுவதும் சொத்துவரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 1988-ம் ஆண்டுக்கு பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டது. இதையடுத்து சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
உயர்வு
மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புக்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக்கள் மற்றும் குடியிருப்புக்கள் அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி விதிக்கப்பட உள்ளது.
பாதிப்பு
தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வால் நடுத்தர, சாதாரண ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1988-ம் ஆண்டுக்கு பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டது. இதையடுத்து சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
உயர்வு
மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புக்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக்கள் மற்றும் குடியிருப்புக்கள் அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி விதிக்கப்பட உள்ளது.
பாதிப்பு
தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வால் நடுத்தர, சாதாரண ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.