கோவையில் தள்ளாடியபடி வாகனம் ஓட்டிய காவலர் : மடக்கிப் பிடித்த பொதுமக்கள் - வீடியோ

கோவை: கோவையில் குடிபோதையில் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை: கோவையில் குடிபோதையில் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட, ஹவுசிங் யூனிட் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு காவலர் ஒருவர், குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை விரட்டிப்பிடித்தனர். பின்னர், அங்கிருந்த சிலர், "ஒரு போலீஸ் இப்படி பண்ணலாமா…? நாங்க ஹெல்மெட் போடமா வந்தா மட்டும் பிரச்சினை, நீங்க மட்டும் தண்ணி போட்டுட்டு வண்டி ஓட்டினா தப்பில்லையா? என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டனர்.

ஆனால், பொதுமக்களின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் நிலையில் அந்த காவலர் இல்லை. அப்படியே தள்ளாடியபடி வண்டியை விட்டு இறங்கி நிற்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்த காவலரின் பெயர் வினோத் என்பதும் தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக அந்த பொதுமக்கள் செல்வபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அந்த காவலருக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சார்ஜ் சீட் (Drink and Drive) போட்ட செல்வபுரம் போலீசார், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...