கோவை: கோவையில் குடிபோதையில் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவையில் குடிபோதையில் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட, ஹவுசிங் யூனிட் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு காவலர் ஒருவர், குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை விரட்டிப்பிடித்தனர். பின்னர், அங்கிருந்த சிலர், "ஒரு போலீஸ் இப்படி பண்ணலாமா…? நாங்க ஹெல்மெட் போடமா வந்தா மட்டும் பிரச்சினை, நீங்க மட்டும் தண்ணி போட்டுட்டு வண்டி ஓட்டினா தப்பில்லையா? என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டனர்.
ஆனால், பொதுமக்களின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் நிலையில் அந்த காவலர் இல்லை. அப்படியே தள்ளாடியபடி வண்டியை விட்டு இறங்கி நிற்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்த காவலரின் பெயர் வினோத் என்பதும் தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக அந்த பொதுமக்கள் செல்வபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அந்த காவலருக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சார்ஜ் சீட் (Drink and Drive) போட்ட செல்வபுரம் போலீசார், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட, ஹவுசிங் யூனிட் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு காவலர் ஒருவர், குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை விரட்டிப்பிடித்தனர். பின்னர், அங்கிருந்த சிலர், "ஒரு போலீஸ் இப்படி பண்ணலாமா…? நாங்க ஹெல்மெட் போடமா வந்தா மட்டும் பிரச்சினை, நீங்க மட்டும் தண்ணி போட்டுட்டு வண்டி ஓட்டினா தப்பில்லையா? என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டனர்.
ஆனால், பொதுமக்களின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் நிலையில் அந்த காவலர் இல்லை. அப்படியே தள்ளாடியபடி வண்டியை விட்டு இறங்கி நிற்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்த காவலரின் பெயர் வினோத் என்பதும் தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக அந்த பொதுமக்கள் செல்வபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அந்த காவலருக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சார்ஜ் சீட் (Drink and Drive) போட்ட செல்வபுரம் போலீசார், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.