திருப்பூர்: குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகி வரும் குடிநீரில் இளைஞர்கள் ஷாம்பு போட்டு குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருப்பூர்: குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகி வரும் குடிநீரில் இளைஞர்கள் ஷாம்பு போட்டு குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருப்பூர் - அம்மாபாளையம் பகுதியில் மூன்றாம் திட்ட குடிநீரின் குழாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. மூன்றாம் திட்ட குடிநீர் என்பது திருப்பூர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்காக ஈரோடு பவானி அணையில் இருந்து திருப்பூர் மக்களுக்கு சேரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்று வருகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் வகையில், சாலையில் வீணாகும் குடிநீரில் இளைஞர்கள் சிலர் குளியல் போட்டனர். மேலும், சிலர் துணிகளை துவைத்தும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

அரசின் மெத்தனப்போக்கை விமர்சிக்கும் வகையில் இன்றைய கால மக்கள், பல்வேறு விதமான செயல்களை செய்தாலும், அரசு செயலற்று கிடப்பது வேதனையை அள்ளி வீசுவதாக உள்ளது.
