லாரி ஸ்ட்ரைக்: நீலகிரி காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

நீலகிரி: நான்காவது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.


நீலகிரி: நான்காவது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை. இதனால், விவசாய விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது தடைபட்டுள்ளது.



லாரிகள் வேலைநிறுத்தத்தையொட்டி சிலர் முன்கூட்டியே மலைக்காய்கறிகளை அறுவடை செய்தனர். தற்போது லாரிகள் ஓடாததால் விவசாயிகள் மலைக்காய்கறிகளை அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டு உள்ளனர். இதன் காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.

மார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, வயநாடு, நிலம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறிய ரக சரக்கு வாகனங்களில் மலைக்காய்கறிகள் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. லாரியில் அதிக அளவிலான காய்கறி மூட்டைகளை ஏற்றலாம். சரக்கு வாகனங்களில் குறைந்த அளவிலேயே காய்கறிகளை ஏற்ற முடியும். இருந்தாலும், சரக்கு வாகனங்களில் வெளியிடங்களுக்கு மலைக்காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.



மேலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால், உள்ளூரில் விளையும் கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், டர்னீப் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் வெளியிடங்களுக்கு அனுப்புவது குறைந்துள்ளது.

விலை உயர்வு

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மலைக்காய்கறிகள் மூலம் தினமும் ரூ.40 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெறும். ஆனால், தற்போது ரூ.10 லட்சம் வரை மட்டுமே வியாபாரம் நடந்து உள்ளதுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.30 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



ஒரு கிலோ புரூக்கோலி ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. ஆனால், தற்போது ரூ.30 விலை உயர்ந்து கிலோ ரூ.100–க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.55, கேரட் ரூ. 20-25, பீட்ரூட் ரூ.30-35க்கு விற்பனை ஆகிறது.



தொடர்ந்து காய்கறிகள் விலை உயர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...