மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் புற வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை முன் கூட்டியே கொடுத்து விட்டு பணியை தொடங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் புற வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை முன் கூட்டியே கொடுத்து விட்டு பணியை தொடங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் புற வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புறவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் புற வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை முன் கூட்டியே கொடுத்து விட்டு பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மேட்டுப்பாளையத்தில் உள்ள குட்டையூர் முதல் ஓடந்துறை வரை சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிற்கு புற வழிச்சாலை அமைக்கப்படும். இந்த சாலைப் பணிக்காக இப்பாதையில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதனை அறிவித்து பல ஆண்டுகளாகியும் திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால், புறவழிச்சாலை அமையும் இடத்தில் உள்ள விவசாய நிலங்களை அடகு வைத்து கடன் பெறவோ அல்லது அவசர தேவைக்காக விற்கவோ இயலாமல் விவசாயிகள் தவித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குறுகிப்போன சாலைகளை விரிவாக்காமல் விட்ட காரணத்தினாலேயே புறவழிச்சாலை திட்டங்கள் அவசியமாகிறது. நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு கைடுலைன் மதிப்பைக் கணக்கிடாமல் சந்தை விலையைக் கணக்கில் கொண்டு இழப்பீடுகள் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்களும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.