மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம்: விமர்சையாக நடைபெற்ற கொடியேற்று விழா

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா கிராம மக்கள் சார்பாக இன்று விமர்சையாக நடைபெற்றது.

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா கிராம மக்கள் சார்பாக இன்று விமர்சையாக நடைபெற்றது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்றம் இன்று மதியம் வெகு விமர்சையாக நடைபெற்றது.



கடந்த 17-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஆடிக்குண்டம் திருவிழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகப் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இன்று தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

பவானி ஆற்றில் கிராம மக்கள் புனித நீராடி, வனத்தில் இருந்து மூங்கில் மரத்திலான கொடி மரத்தையும் சிங்க முகம் பதித்த கொடியையும் மேள தாளம் முழங்க ஆடிப் பாடி எடுத்து வந்தனர்.

பின்னர் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி மரம், சிங்க முக கொடியுடன் கோவில் வளாகத்தில் முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...