கோவை: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா கிராம மக்கள் சார்பாக இன்று விமர்சையாக நடைபெற்றது.
கோவை: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா கிராம மக்கள் சார்பாக இன்று விமர்சையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்றம் இன்று மதியம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 17-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஆடிக்குண்டம் திருவிழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகப் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இன்று தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
பவானி ஆற்றில் கிராம மக்கள் புனித நீராடி, வனத்தில் இருந்து மூங்கில் மரத்திலான கொடி மரத்தையும் சிங்க முகம் பதித்த கொடியையும் மேள தாளம் முழங்க ஆடிப் பாடி எடுத்து வந்தனர்.
பின்னர் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி மரம், சிங்க முக கொடியுடன் கோவில் வளாகத்தில் முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்றம் இன்று மதியம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 17-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஆடிக்குண்டம் திருவிழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகப் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இன்று தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
பவானி ஆற்றில் கிராம மக்கள் புனித நீராடி, வனத்தில் இருந்து மூங்கில் மரத்திலான கொடி மரத்தையும் சிங்க முகம் பதித்த கொடியையும் மேள தாளம் முழங்க ஆடிப் பாடி எடுத்து வந்தனர்.
பின்னர் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி மரம், சிங்க முக கொடியுடன் கோவில் வளாகத்தில் முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.