நீலகிரியில் மரம் விழுத்து உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவி

நீலகிரி: பிங்கர் போஸ்ட் பகுதியில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.

நீலகிரி: பிங்கர் போஸ்ட் பகுதியில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பலத்த காற்றுடன், மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த இமாம் அகஸ்டியன் என்ற கல்லூரி மாணவன், கடந்த, 15-ம் தேதி குடும்பத்தினருடன் நடந்து சென்றபோது, சாலையோர கற்பூர மரம் விழுந்தது. இதில், இமாம் அகஸ்டியன் பலத்த காயமடைந்தார். 

தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, மாநில அரசு சார்பில், பேரிடர் நிவாரண நிதி, ரூ.4 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...