நீலகிரி: பிங்கர் போஸ்ட் பகுதியில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.
நீலகிரி: பிங்கர் போஸ்ட் பகுதியில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பலத்த காற்றுடன், மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த இமாம் அகஸ்டியன் என்ற கல்லூரி மாணவன், கடந்த, 15-ம் தேதி குடும்பத்தினருடன் நடந்து சென்றபோது, சாலையோர கற்பூர மரம் விழுந்தது. இதில், இமாம் அகஸ்டியன் பலத்த காயமடைந்தார்.
தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, மாநில அரசு சார்பில், பேரிடர் நிவாரண நிதி, ரூ.4 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பலத்த காற்றுடன், மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த இமாம் அகஸ்டியன் என்ற கல்லூரி மாணவன், கடந்த, 15-ம் தேதி குடும்பத்தினருடன் நடந்து சென்றபோது, சாலையோர கற்பூர மரம் விழுந்தது. இதில், இமாம் அகஸ்டியன் பலத்த காயமடைந்தார்.
தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, மாநில அரசு சார்பில், பேரிடர் நிவாரண நிதி, ரூ.4 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.