திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே இச்சிப்பட்டியில் சேகர் மற்றும் ரத்தினம் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர்கள் துணி இஸ்திரி செய்யும் கடையை நடத்தி வந்தனர். இவர்களுடன் கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்த ஜான்சன், மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு ஜான்சன் வீட்டிற்கு ரத்தினம் (35) சென்றுள்ளார். இதனை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் ஜான்சனும், ரத்தினமும் வெளியே வரவில்லை. இதனால், அருகிலிருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்த போது, ரத்தினம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து, பல்லடம் போலீசாருக்கும், ரத்தினத்தின் கணவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது- தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இன்று அதிகாலை முதல் ஜான்சன் தலைமறைவானது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்தும், தலைமறைவான ஜான்சனை பற்றியும் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே இச்சிப்பட்டியில் சேகர் மற்றும் ரத்தினம் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர்கள் துணி இஸ்திரி செய்யும் கடையை நடத்தி வந்தனர். இவர்களுடன் கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்த ஜான்சன், மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு ஜான்சன் வீட்டிற்கு ரத்தினம் (35) சென்றுள்ளார். இதனை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் ஜான்சனும், ரத்தினமும் வெளியே வரவில்லை. இதனால், அருகிலிருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்த போது, ரத்தினம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து, பல்லடம் போலீசாருக்கும், ரத்தினத்தின் கணவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது- தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இன்று அதிகாலை முதல் ஜான்சன் தலைமறைவானது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்தும், தலைமறைவான ஜான்சனை பற்றியும் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.