திருப்பூர்: திருப்பூரில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்: திருப்பூரில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிழக்கு காளிபாளையம் கிராம் அம்பாள் நகரில் கனகு என்பவருடைய வீட்டில் பனியன் தொழிலாளி வடிவேல் (35) வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருமாநல்லுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பனியன் தொழிலாளி வடிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த வடிவேலுக்கு சுகன்யா என்ற மனைவியும், நவநீதன் (5) என்ற மகனும் உள்ளனர். வடிவேலு உயிரிழந்தது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டாருக்கு செல்லும் மின்சார வயருக்கு டேப் சுற்றாமல், கம்பி வெளியே இருந்ததால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.