மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பலி

திருப்பூர்: திருப்பூரில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூரில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிழக்கு காளிபாளையம் கிராம் அம்பாள் நகரில் கனகு என்பவருடைய வீட்டில் பனியன் தொழிலாளி வடிவேல் (35) வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருமாநல்லுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உயிரிழந்த பனியன் தொழிலாளி வடிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த வடிவேலுக்கு சுகன்யா என்ற மனைவியும், நவநீதன் (5) என்ற மகனும் உள்ளனர். வடிவேலு உயிரிழந்தது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டாருக்கு செல்லும் மின்சார வயருக்கு டேப் சுற்றாமல், கம்பி வெளியே இருந்ததால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...